Saturday, January 10, 2015

தேர்வில் சாதிப்பது எப்படி?
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருப்பீர்கள்.
எப்படி படித்தால் தேர்வில் சாதிக்கலாம்?
* படிப்பது மட்டுமே நமது வேலை. மற்றவர்களை போட்டியாக நினைக்கக்கூடாது.
* திருப்புதல் தேர்வுகளின் போது, சரியாகப் படித்தால் நிறைய மதிப்பெண் எடுக்க முடியும்.
* தேர்வுக்கு இறுதி மூன்று மாதங்கள் கூடுதல் கவனமுடன், சின்னச் சின்ன திட்டமிடல்களுடன் படிக்க வேண்டும்.
* முதன்மைப் பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், மொழிப்பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.
* திட்டமிட்டு படித்தலே வெற்றிக்கு அடிப்படை.
* வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது, சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
* தியானப் பயிற்சி செய்வதால் 'டென்ஷன்' குறையும்; ஞாபக சக்தி அதிகரிக்கும்.
* முந்தைய ஆண்டு வினாத்தாள்களுக்கு விடையளித்தும், வரைபடங்களை வரைந்தும் பயிற்சி எடுக்க வேண்டும்.
* ஒவ்வொரு நாளும், வகுப்பறையில் நடத்தும் பாடங்களை திட்டமிட்டு படித்து வீட்டிற்கு வந்ததும் எழுதிப்பார்ப்பது சிறந்தது.
* பிழைகள் இல்லாமல், தெளிவாகவும்; அர்த்தம் மாறாமலும் தேர்வு எழுதப் பழக வேண்டும்.
* மறுநாள் படிக்கலாம் என நினைக்காமல் தினமும் படிக்கவேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் வீட்டில் சுயமாக தேர்வு எழுதி பயிற்சி
பெறவேண்டும்.
* இரவு துாக்கம் வரும்வரை படிக்கலாம். 'டிவி' பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.
* காய்கறி, பழங்கள் உண்பது மனதையும், உடலையும் புத்துணர்வுடன் வைக்கும்.
* லட்சியத்துடன் படித்தால் தேர்வில் அனைவரும் சாதிக்கலாம்.